தனியார் பள்ளிகளுக்கு
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும்
என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்
உள்ள தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழக அரசால்
அமைக்க்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ.
பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை
தாக்கல் செய்துள்ளன. சி.பி.எஸ்.இ.
வாரியத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் தங்கள் பள்ளிகளை தமிழக அரசின்
கல்விக் கட்டண நிர்ணய உத்தரவு கட்டுப்படுத்தாது என்று அவர்கள் தங்கள்
மனுக்களில் கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் அரசு கூடுதல்
வழக்குரைஞர் பி. சஞ்சய் காந்தி அண்மையில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில்,
சி.பி.எஸ்.இ. வாரியம் என்பது தேர்வுகளை நடத்துவதற்கான ஓர் அமைப்பு
மட்டுமே. கல்விக் கட்டண விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. தலையிட முடியாது.
பள்ளிகள்
வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் தொடர்பாக மாநில அரசு பிறப்பிக்கும்
உத்தரவுகளின்படியே பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு
கூறியுள்ளது.
No comments:
Post a Comment