Saturday 19 August 2017

10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | தற்போது 10-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் தேசிய திற னாய்வுத் தேர்வுக்கு வருகிற 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2017-18), அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருகிற 21-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1-ம் தேதி ஆகும். மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படாது. கூடுதல் விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. Looking For RRB Secunderabad Group D Result 2018? Look no more. Here, we are, providing the all RRB Result, may it be Group D, ALP, and RPF right, at one place at railway result.in. So, keep yourself updated with RRB Result.

    ReplyDelete

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...