வரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக்
கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் நோக்கத்துடன் வரும்
ஆண்டுகளில் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக்
கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பில் (எம்பிபிஎஸ்) புதிதாக 345 இடங்கள்
உருவாக்கப்படும். தமிழக அரசின் முன்னோடித் திட்டமான முதல்வரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில்
அதிநவீன சிகிச்சைகளைப் பெற வகை செய்துள்ளது.