கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்டதிற்குள் ஆசிரியர் மாறுதலுக்கும்,
மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வும், வரும் 19,
20ம் தேதிகளில் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி வெளியிட்ட
அறிக்கை: அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி
மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய
ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகிய
ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலரால் மாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படுகிறது.
வரும் 19ம் தேதி மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் கோரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, வரும் 20ம் தேதி கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு துவங்கும். தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வரும் 19ம் தேதி மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் கோரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, வரும் 20ம் தேதி கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு துவங்கும். தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
No comments:
Post a Comment