அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை
வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச
நீதிமன்றம், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை
ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
பிறப்பித்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அடுத்த 6 மாத காலத்துக்குள்
நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
6 மாதங்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத
பட்சத்தில், அது குறித்து மனுதாரர் மேல்முறையீடு செய்யவும் உச்சநீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment